பிரித்தானியச் சிறைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடியைச் சமாளிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவிருந்த கைதிகளின் முன்விடுதலைத் திட்டத்தில் பிரித்தானியப் பிரதமர் ‘அன்டி பே(ர்)னாம்’ முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.
இதன்படி, பாலியல் வல்லுறவு, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் முன்விடுதலைத் திட்டத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டுள்ளனர்.
எனினும், குடும்ப வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆண்ட்ரூ ஹார்பரின் (Andrew Harper) மரணத்திற்குக் காரணமானவர்கள் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து முன்விடுதலை அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளமைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அரசாங்கத்தின் இந்த முடிவு பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதுடன், பொலிஸ் அதிகாரிகளின் தியாகத்தை இழிவுபடுத்துவதாக மனித உரிமை அமைப்புகளும் பொலிஸ் சம்மேளனமும் கவலை வெளியிட்டுள்ளன.















