தமிழகத்தில் தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், வரவுசெலவு திட்டம் தாக்கல் மற்றும் சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
நாளை பொது வரவுசெலவு திட்டமும் , அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














