தென் கொரியாவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலைமையை ஒரு ‘தேசியப் பேரிடர்’ என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே-ம்யுங், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளை அதிகரிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
செவ்வாயன்று (04) அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய லீ, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், குளிரூட்டி (AC) வசதி பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின்சார அமைப்புகளைச் சோதிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தென்கொரியாவில் ஞாயிற்றுக்கிழமையன்று 42.5 டிகிரி செல்சியஸ் (108.5 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளதாக நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 122 ஆண்டுகால வானிலை பதிவுகளில் இதுவே மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.
கொரிய வானிலை ஆய்வு மையம், சியோல் (Seoul) மற்றும் அதை ஒட்டிய கியோங்கி (Gyeonggi) மாகாணத்தின் சில பகுதிகளுக்குத் திங்களன்று முதன்முறையாக வெப்ப அலை (heatwave) எச்சரிக்கையை விடுத்தது.
செவ்வாய்க்கிழமையன்று இந்த எச்சரிக்கை தலைநகர் பகுதி முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
வெப்ப அலை எச்சரிக்கையானது, விவசாயம், விளையாட்டு மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது போன்ற வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.















