பிரேசிலின் பிரபல சுற்றுலா நகரமான ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த விமானி மற்றும் கொலம்பிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளுக்கு நகரை வான்வழியாகச் சுற்றிக் காட்டும் சேவையை வழங்கும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டரே இவ்வாறாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹெலிகாப்டர் கீழே விழுந்த கனநேரத்திலேயே தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும், அதற்குள் விமானியும் கொலம்பியச் சுற்றுலாப் பயணியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து பிரேசில் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















