முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிச் செயலாளர் சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவரை நேற்று (21) சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றது தொடர்பான ஒரு சம்பவம் குறித்த விசாரணையின் தொடர்பில் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டார்.














