கிளிநொச்சி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பரந்தன் சோதனைச் சாவடியில் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று (19) கைது செய்யப்பட்டனர்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொரிகளின் அனுமதிப் பத்திரங்களை கிளிநொச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகள் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தால் வழங்கப்பட்ட மணல் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தில், அதிகாரப்பூர்வ அங்கீகாரத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியைச் சான்றளிக்காமல் விடுவதற்காக, சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றனர்.
சந்தேக நபர்கள் 28, 29, 40 மற்றும் 49 வயதுடையவர்கள்; இவர்கள் வவுனியாவின் ராமநாதபுரம், தர்மபுரம், ஆனந்தபுரம் மற்றும் புலோலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் செப்டம்பர் 21 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












