அடுத்த சில நாட்களில் வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வளிமண்டலச் சூழல் சாதகமாக அமையவுள்ளது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வட-மத்திய மற்றும் வட-மேற்கு மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலமான காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரையிலான காலப்பகுதியில் சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே அமையவுள்ளது.
இன்று (02) நண்பகல் 12.10 மணியளவில் இலங்கையில் சூரியன் நேர் மேலே அமையும் இடங்களாக அனமடுவ, மொரகொல்லகம, தம்புள்ளை, மனம்பிட்டிய மற்றும் வாழைச்சேனை ஆகியவை உள்ளன.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும்.
காற்றின் வேகம் மணிக்கு (30-40) கிலோமீட்டராக இருக்கும்.
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு (50-60) கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக புத்தளம் வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
கடல் நிலை:
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக புத்தளம் வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வழியாக புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் (2.0 – 2.5) மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.














