• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் – மட்டக்களப்பில் போராட்டம்

971 Views
4 weeks ago
67 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Dhackshala Dhackshala
    Subscriber

    மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

    மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பொது அமைப்புகள், ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்தன.

    இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், போரினால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினர், பெண்கள் அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

    இதன்போது ஆர்ப்பாட்டம் தொடர்பிலான ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டதுடன், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டன.

    அந்தவகையில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அதிகாரி ஆகியோருக்கு இவ்வறிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.

    குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

    மியன்மார் இராணுவ ஆட்சியுடன் கொண்டுள்ள அனைத்துவிதமான உறவுகளையும் பரிமாற்றங்களையும் நிறுத்துமாறு இலங்கை அரசைக் கோருகிறோம். மனித உரிமைகளை மீறுவதில் மிகவும் அபகீர்த்திக்குள்ளான அரசுகளில் ஒன்றாக ஆசியாவிலும் உலக அளவிலும் மியன்மார் அரசு உருவாகியுள்ளது.

    2021 மாசி மாதம் முதலாம் திகதி, மூத்த இராணுவ ஜெனரல் மின் ஆங் லாயிங் மற்றும் அவரின் இராணுவம் மியன்மாரில் ஜனநாயகமாக தெரிவுசெய்யப்பட்ட தேசிய ஜனநாயக லீக் தலைமையிலான அரசை இராணுவ சதியின் மூலம் கைப்பற்றியதோடு, மக்களின் தலைவர்களான ஆங் சாங் சூகி, நாட்டின் ஜனாதிபதி அடங்களான பல தலைவர்களையும் கைதுசெய்து வீட்டுக்காவலில் வைத்தனர்.

    நாட்டின் தலைநகரான யங்கூன் மின்சார வெட்டால் இருளில் மூழ்கடிக்கப்பட்டதோடு, நாடுமுழுதும் வலைத் தொடர்புகள் முடக்கப்பட்டன.

    மக்கள் வீதிகளில் இறங்கி தமது தலைவர்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம் செய்ததோடு தமது ஜனநாயக உரிமைகளுக்காக குரல்கொடுத்தனர்.

    ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை சார்ந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள மியன்மார் இராணுவம் அமைதியாக போராடியவர்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதலை மேற்கொண்டது. இதுவரையில் 120க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டிருப்பதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

    இளம் பெண்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ளனர். படுகொலைக்கு உள்ளானோரில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்கும் குறைந்தவர்களாகும். 2000இற்கும் மேற்பட்டோர் ஏதேச்சாதிகாரமாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தமது குடும்பத்துடன் தொடர்புகொள்ளவோ சட்டத்தரணிகளை அணுகவோ அனுமதிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட தமது பிள்ளைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என பல குடும்பத்தினருக்குத் தெரியாது. போராட்டக்காரர்களுக்கும் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் எதிராக இராணுவம் சித்திரவதைகளையும் அட்டூழியங்களையும் மேற்கொண்டு வருகிறது.

    ஜ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரஸ், மியன்மாரில் நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்துள்ளதோடு, சிவில் ஆட்சி முறைமைக்கு திரும்புமாறு கோரியுள்ளார்.

    மியன்மாருக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் தோமஸ் அன்ருஸ் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும்போது, மியன்மார் நாடானது ஒரு கொலைகார, சட்டபூர்வமற்ற ஆட்சியினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தடைகளைப் பிறப்பிக்குமாறும் கேட்டுள்ளார்.

    ஜ.நா. பாதுகாப்புச் சபையானது தனது தலைமைத்துவ அறிக்கையில், மியன்மாரின் வீழ்ச்சியுறும் நிலைவரம் குறித்து ஆழ்ந்த கரிசணைகளை வெளிப்படுத்தியிருப்பதோடு, அமைதியான போராட்டக்காரர்கள் மீதான வன்முறைகளை கடுமையாகக் கண்டித்திருப்பதுடன், ஜனநாயகத்துக்கு திரும்புமாறு கோரியுள்ளது.

    அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள், தாம் மியன்மாரில் ஜனநாயகத்தை மீள ஸ்தாபிக்க கூட்டாக செயற்படுவதாக பிரகடணப்படுத்தியுள்ளதாக வெள்ளைமாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மியன்மார் இராணுவ சதிக்குப் பொறுப்பான பத்துப் பேருக்கு எதிராக அமெரிக்கா தடைகளைப் பிறப்பித்துள்ளது. இதில் இராணுவத்துக்கு நெருக்கமான மூன்று கம்பனிகளும் அடங்கும். ஐக்கிய இராச்சியம் மூன்று ஜெனரல்களுக்கு எதிராக தடைகளைப் பிறப்பித்துள்ளது.

    மியன்மாரில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதை தான் கவனத்திற்கெடுத்துள்ளதாகவும் அந்த நாட்டுக்கான இராணுவ – தொழில்நுட்ப உதவிகளை நிறுத்துவதற்கு யோசிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

    மியன்மார் இராணுவ சதியைக் கண்டித்து தென்கொரியா பாராளுமன்றம் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருப்பதோடு, ஜனநாயகத்துக்குத் திரும்புமாறும் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் கோரியுள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையும் உலகின் ஜனநாயக நாடுகளும் மியன்மார் இராணுவம் தலைமையின் அட்டூழியங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதுடன் சிவில் ஆட்சிக்கு திரும்புமாறு கோரிவருகின்றன.

    இலங்கையின் சிவில் அமைப்பினரும் பொதுமக்களுமான நாம் ஐ.நா.வுடனும் உலகின் ஜனநாயக நாடுகளுடனும் கூட்டிணைந்து மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் மியன்மாரின் கொலைகார, சட்டபூர்வமற்ற இராணுவ ஆட்சியுடன் உறவாட வேண்டாம் என்றும் இலங்கை அரசுக்கு வலியுறுத்துகிறோம்.

    மியன்மாரில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐ.நா. பொதுச்சபையிலும் மனித உரிமைகள் பேரவையிலும் பரிந்துரை செய்யுமாறு நாம் இலங்கை அரசைக் கோருகிறோம்

    சார்க் நாடுகளையும் மக்களையும் மியன்மார் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்குமாறும் இராணுவ ஜுன்டா ஆட்சியுடன் உறவாட வேண்டாம் என்றும் நாம் வலிந்துரைக்கிறோம்

    மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியதிகாரத்திலிருந்து இறங்கி ஜனநாயகமாக தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்கவும் மதச் சிறுபான்மையினரின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தவும் மியன்மாரில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கவும் வேண்டுமென நாம் ஐ.நா.வையும் சர்வதேச சமூகத்தையும் கோருகிறோம்.

    Category: ஆசிரியர் தெரிவு இலங்கை
    Tags: போராட்டம்மட்டக்களப்புமியன்மார்
    Share12Tweet7Send

    Related Posts

    கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் காரணம்- உலமா கட்சி குற்றச்சாட்டு!
    இலங்கை

    கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் காரணம்- உலமா கட்சி குற்றச்சாட்டு!

    April 13, 2021
    இந்த ஆண்டு பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் – பிரதமர் நம்பிக்கை
    இலங்கை

    இந்த ஆண்டு பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் – பிரதமர் நம்பிக்கை

    April 13, 2021
    ஹட்டனில் கோர விபத்து: இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு – பெண் காயம்
    இலங்கை

    ஹட்டனில் கோர விபத்து: இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு – பெண் காயம்

    April 13, 2021
    அடுத்த வாரம் முதல் சினோபோர்ம் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை !!
    ஆசிரியர் தெரிவு

    சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் – சுதத் சமரவீர

    April 13, 2021
    இந்தியாவின் கொரோனா நிலைவரம்!
    இலங்கை

    நேற்று அதிகளவிலான நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!!

    April 13, 2021
    கொரோனா வைரஸ் : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!
    இலங்கை

    இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    April 13, 2021
    Next Post
    கோப்ரா படத்தின் வெளியீடு குறித்து முக்கிய அறிவிப்பு

    கோப்ரா படத்தின் வெளியீடு குறித்து முக்கிய அறிவிப்பு

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    MOST POPULAR

    இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

    April 9, 2021
    இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

    இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

    March 25, 2021
    யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

    யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

    April 8, 2021
    சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

    புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

    April 7, 2021
    மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

    மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

    March 28, 2021
    ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..

    ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..

    March 28, 2021
    Load More
    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.