• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

பகர் சமானின் அதிரடி வீண்: பாகிஸ்தான் அணியுடான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி!

Anojkiyan by Anojkiyan
April 5, 2021
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
பகர் சமானின் அதிரடி வீண்: பாகிஸ்தான் அணியுடான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி!
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி சமநிலை செய்துள்ளது.

ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பவுமா 92 ஓட்டங்களையும் டி கொக் 80 ஓட்டங்களையும் வெண்டர் டஸன் 60 ஓட்டங்களையும் மில்லர் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளையும், ஷாயின் அப்ரிடி, மொஹமட் ஹஸ்னைன் மற்றும் பஹீம் அஸ்ரப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 342 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பக்கு 324 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பகர் சமான் 193 ஓட்டங்களையும் பாபர் அசாம் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், என்ரிச் நோட்ஜே 3 விக்கெட்டுகளையும் என்டில் பெலுக்வாயோ 2 விக்கெட்டுகளையும் ரபாடா, ங்கிடி மற்றும் சம்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 155 பந்துகளில் 10 சிக்ஸர்கள் 18 பவுண்ரிகள் அடங்களாக 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பகர் சமான தெரிவுசெய்யப்பட்டார்.

பகர் சமானின் இந்த 193 ஓட்டங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது.

இந்த பட்டியலில் அவுஸ்ரேலியாவின் ஷேன் வொட்சன் 185 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் டோனி மற்றும் கோஹ்லி 183 ஓட்டங்களுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர்.

பகர் சமான் 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம் சேஸிங் துடுப்பாட்டத்தில் தோல்வியை தழுவிய அணியில், தனியொரு வீரரின் இரண்டாவது அதிகபட்ச ஓட்டத்தை அவர் பதிவுசெய்தார்.

முன்னதாக பங்களாதேஷ் அணிக்கெதிரான சிம்பாப்வே வீரர் சார்லஸ் கோவண்ட்ரி 194 ஓட்டங்களை எடுத்ததோ சாதனையாக உள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் சென்சூரியனில் நடைபெறவுள்ளது.

 

Tags: ஒருநாள் போட்டிதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிபாகிஸ்தான் அணி
Share12Tweet8Send

Related Posts

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பங்களாதேஷ் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 474-4
கிரிக்கெட்

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பங்களாதேஷ் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 474-4

April 22, 2021
பெங்களூர் அணியின் வெற்றிப் பாதையை தடுக்குமா ராஜஸ்தான்?
கிரிக்கெட்

பெங்களூர் அணியின் வெற்றிப் பாதையை தடுக்குமா ராஜஸ்தான்?

April 22, 2021
ஐ.பி.எல்.: பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி!
கிரிக்கெட்

ஐ.பி.எல்.: பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி!

April 22, 2021
இலங்கை டெஸ்டின் முதல்நாள் முடிவு: நஜ்முல் ஹொசைன் சதத்துடன் வலுவான நிலையில் பங்களாதேஷ்!
கிரிக்கெட்

இலங்கை டெஸ்டின் முதல்நாள் முடிவு: நஜ்முல் ஹொசைன் சதத்துடன் வலுவான நிலையில் பங்களாதேஷ்!

April 22, 2021
முதலாவது வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
கிரிக்கெட்

முதலாவது வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

April 22, 2021
மும்பையை வீழ்த்தியது டெல்லி கெபிட்டல்ஸ்!
கிரிக்கெட்

மும்பையை வீழ்த்தியது டெல்லி கெபிட்டல்ஸ்!

April 21, 2021
Next Post
தேர்தல் விதி மீறல்கள் : 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன!

தேர்தல் விதி மீறல்கள் : 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் கைவரிசை காட்டிய முக்கிய புள்ளி பிடிபட்டார்- அவருடன் மேலும் அறுவர் கைது!

வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் கைவரிசை காட்டிய முக்கிய புள்ளி பிடிபட்டார்- அவருடன் மேலும் அறுவர் கைது!

April 22, 2021
யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் நாளை திறக்கப்படுகிறது!

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் நாளை திறக்கப்படுகிறது!

April 22, 2021
நாட்டில் மேலும் 163 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு: 243 பேர் குணமடைவு!

நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்தது கொரோனா!

April 22, 2021
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

April 22, 2021

Recent News

வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் கைவரிசை காட்டிய முக்கிய புள்ளி பிடிபட்டார்- அவருடன் மேலும் அறுவர் கைது!

வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் கைவரிசை காட்டிய முக்கிய புள்ளி பிடிபட்டார்- அவருடன் மேலும் அறுவர் கைது!

April 22, 2021
யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் நாளை திறக்கப்படுகிறது!

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் நாளை திறக்கப்படுகிறது!

April 22, 2021
நாட்டில் மேலும் 163 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு: 243 பேர் குணமடைவு!

நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்தது கொரோனா!

April 22, 2021
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

April 22, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.