பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 40இலட்சத்து 777பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை 43இலட்சத்து 78ஆயிரத்து 305பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மொத்தமாக ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 161பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 491பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்து 50ஆயிரத்து 367பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 370பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



















