செக் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 29ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செக் குடியரசில் கொரோனா வைரஸ் தொற்றினால், 29ஆயிரத்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 19ஆவது நாடாக விளங்கும் செக் குடியரசில் மொத்தமாக 16இலட்சத்து 20ஆயிரத்து 206பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 820பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 21பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 53ஆயிரத்து 842பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 694பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 15இலட்சத்து 37ஆயிரத்து 362பேர் பூரண குணமடைந்துள்ளனர்.



















