• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை

அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றது – சிறிதரன்

1.061 Views
2 years ago
74 0
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    Subscriber

    எரிபொருள் விலையேற்றத்தினூடாக மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் பாரிய அளிவில் இந்த அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

    அம்பாறை – பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா நிலைமையால் பாதிப்புற்ற வறிய குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் பொருளாதார நலிவு நிலையைச் சமாளிக்கும் வகையில் நேற்று(செவ்வாய்கிழமை) உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்பாட்டின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தொவித்தார்.

    அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “பெற்றோல் விலையேற்றம் தொடர்பில் இன்று நாட்டில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த ரணில் மைத்திரி அரசு இருந்த போது குறிப்பிட் ஆறு, ஏழு ரூபாய் விலைச் சூத்திரத்தில் விலையேற்றம் இடம்பெற்றதைக் காரணம் காட்டி நாட்டின் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ துவிச்சக்கர வண்டியில் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

    ஆனால் இன்று அவர்களால் ஒரு லீட்டர் பெற்றோல் 20 ரூபாய், டீசல் 12 ரூபாய், மண்ணெண்ணெய் 7 ரூபாய் வரையும் விலையேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.

    மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் பாரிய அளவில் இந்த அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. இந்த அரசாங்கமானது மூழ்கும் நிலையிலுள்ள கப்பலுக்குச் சமமானதாகவே இருக்கின்றது.

    அது மூழ்குகின்ற நிலையிலும் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போன்று இந்த நாட்டின் தலைவர் ஏழைகளின் கண்ணீரிலே பிடில் வாசித்துக் கொண்டிருக்கின்றார். அதபோல் அவரின் அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றது.

    சிங்களம், தமிழ், முஸ்லீம் மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று சிங்கள மக்கள் வெறுப்படைந்து போயிருக்கின்றார்கள்.

    தங்களுடைய தெரிவும் இனவாத அடிப்படையில் அவர்கள் அளித்த வாக்கும் எவ்வளவு கேவலமான முடிவு என்று அவர்கள் நினைக்கும் அளவிற்கு இந்த அரசின் செயற்பாடுகள் அவர்களுடைய மனநிலைகளைப் புரிய வைத்திருக்கின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Category: அம்பாறை இலங்கை கிழக்கு மாகாணம் முக்கிய செய்திகள்
    Share14Tweet8Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்
    இலங்கை

    வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

    2023-06-08
    மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
    இலங்கை

    மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

    2023-06-08
    மன்னாரில் கச்சான் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை!
    இலங்கை

    மன்னாரில் கச்சான் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை!

    2023-06-08
    தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
    இலங்கை

    தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

    2023-06-08
    அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிக்கப் புதிய திட்டம் : ஜனாதிபதி!
    இலங்கை

    அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிக்கப் புதிய திட்டம் : ஜனாதிபதி!

    2023-06-08
    மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!
    இலங்கை

    சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் : கஜேந்திரகுமார்!

    2023-06-08
    Next Post
    கன மழை காரணமாக நீருடன் கலந்த உலை எண்ணெய் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம் !

    கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை- TNA மற்றும் JVPஇன் ஆதரவைக் கோரும் சஜித் தரப்பு

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.