எஸ்டோனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, ஒரு இலட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, எஸ்டோனியாவில் ஒரு இலட்சத்து 30ஆயிரத்து மூன்று பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 96ஆவது நாடாக விளங்கும் எஸ்டோனியாவில் இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 35ஆயிரத்து 856பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரத்து 279பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 344பேர் பாதிக்கப்பட்டதோடு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்காயிரத்து 574பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



















