• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அபகரிக்கப்பட்டுள்ள வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை

அபகரிக்கப்பட்டுள்ள வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை

Yuganthini by Yuganthini
2021/10/04
in இலங்கை, பிரதான செய்திகள், மட்டக்களப்பு
93 1
A A
0
53
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அபகரிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு- வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான வயல்காணியை, முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஆலய பரிபாலனசபை குறிப்பிட்டுள்ளது.

ஆகவே இந்த ஆலயத்துக்கு சொந்தமான 21 ஏக்கர் வயல் காணியை மீட்டுத்தருமாறு ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஆலய பரிபாலன சபையினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த ஆலயம் நூற்றாண்டுகளுக்கு மேற்பட்டதுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் முதல் பதிவு செய்யப்பட்ட ஆலயமாகும்.

மேலும், ஆலயத்தினை சுற்றி காணப்பட்ட ஊத்துச்சேனை, சிறிஓடை, கள்ளிச்சி ஓடை, குமாரபுர, வடமுனை ஆகிய 5 கிராமங்களில் தமிழ் சிங்கள மக்கள் வாழ்ந்துவந்தனர்.

இந்நிலையில் 1990 ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தினால் தமிழ்மக்கள் தமது காணிகள் வீடுகளை விட்டு வெளியேறி வாழைச்சேனைக்கும் சிங்கள மக்கள் வெலிகந்தைக்கும் இடம்பெயர்ந்தனர்.

இதனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயம், மக்கள் சென்று பராமரிக்கமுடியாத நிலையினையடுத்து ஆலய கூரைகள் உடைந்து பாரிய சேதமடைந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ம் ஆண்டு மக்கள் மீண்டும் குடியேறிய நிலையில் ஆலயத்துக்கும் செல்லும் வீதி மக்கள் பிரயாணிக்க முடியாதளவு சேதமடைந்துள்ளது.

ஆலயத்துக்கு முன்னாள் உள்ள ஆற்றிற்கு மறுபக்கம் 1926 ம் ஆண்டு வழங்கப்பட்ட காணி உறுதியுடனான 21 ஏக்கர் வயல்காணியாகும். இந்த காணியை 2010 ம் ஆண்டு முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தனது காணி என காணிபத்திரத்தை கொண்டு அபகரித்து வேளாண்மை செய்துவருகின்றார்.

இந்த ஆலயத்துக்கு சொந்தமான காணியை பெற்றுத்தருமாறு கிரான் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தோம். அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.

அதேவேளை கடந்த மாதம் அந்த வயல்காணியை ஆலய நிர்வாகம் வேளாண்மை செய்வதற்காக உழுது, நெல்லை பயிரிட்டது. 21 நாட்களின் பின்னர் குறித்த நபர் உழவு இயந்திரம் கொண்டு அந்த வேளாண்மை பயிரை அழித்தார்.

ஆகவே ஆலயத்துக்கு சொந்தமான இந்த வயல்காணியை உரிய அதிகாரிகள் பெற்றுத்தரவேண்டும்” என ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: ஆலய பரிபாலனசபை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

Next Post

இந்திய வெளியுறவு செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

Related Posts

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!
இலங்கை

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14
பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
இலங்கை

பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

2026-03-14
கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்
இலங்கை

கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்

2026-03-14
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
இலங்கை

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

2026-03-14
Next Post
இந்திய வெளியுறவு செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

இந்திய வெளியுறவு செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்!

பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் – எழுதுமட்டுவாள் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

யாழ்ப்பாணம் - எழுதுமட்டுவாள் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

0
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.