• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செம்மணி மனித எச்சங்கள் ஆய்வு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் மரபணு மாதிரிகளைச் சேகரிக்க ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

செம்மணி மனித எச்சங்கள் ஆய்வு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் மரபணு மாதிரிகளைச் சேகரிக்க ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/05
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வுசெய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(05) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் ஓகஸ்ட் 04ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் செம்மணிமனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் இதுவரை மொத்தம் 483மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

அவற்றில் 481 மனித எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

எனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒப்புதலுடன் அவர்களின் மரபணுக்களைச் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மனிதப்புதைகுழி விடயத்தில் அடையாளங்காணப்பட்ட எலும்புத்தொகுதிகளை நிலத்திலிருந்து அகழ்ந்தெடுப்பதென்பது முதற்கட்ட செயற்பாடாகும்.

அதன் பிற்பாடு என்பு மாதிரிகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்வது இரண்டாவது நடவடிக்கையாகும்.

அதனைத்தொடர்ந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதிகளின் கால எல்லை தொடர்பில் தொல்லியல் திணைக்களம் அறிவியல் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிப்பார்கள்.

மூன்றாவது கட்டமாகவே காணாமல்போன உறவுகள் தொடர்பான தேடுதல் விவகாரங்கள் ஆரம்பமாகும்.

யாராவது தங்களுடைய உறவினர்கள் குறிப்பிட்ட காலத்தில் காணாமல்போனதாகவோ அல்லது, கைதுசெய்யப்பட்டதன் பிற்பாடு இருப்பிடம் தெரியவில்லை என்றோ முறைப்பாடு வழங்கியிருந்தால், தொல்லியல் திணைக்களம் கணித்துள்ள காலப்பகுதியோடு அந்தத் தரவுகளை ஒப்பிட்டு பாதிக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஆய்வுசெய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளது.

ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணுக்களைச் சேகரித்து அதனைப் பாதுகாக்கும் காப்பகம் எதுவும் இதுவரை உருவாக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் பங்கேற்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான ரனித்தா ஞானராசா அவர்களும் அண்மையில் இதுதொடர்பில் வலியுறுத்தியிருக்கின்றார்.

எனவே இதுதொடர்பிலும் கவனஞ்செலுத்தப்படவேண்டுமென இவ் உயரிய சபையைக் கோருகின்றேன் – என்றார்.

Related

Tags: chemmaniJaffnaravikaran mpsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குட்டிமணி, தங்கத்துரை சிலை அமைப்பு விவகாரம் – தற்காலிக தடை உத்தரவை நீக்கியது நீதிமன்றம்!

Next Post

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம்!

Related Posts

இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!
இலங்கை

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

2026-09-16
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-16
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 
பிரதான செய்திகள்

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

2026-09-16
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-09-16
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!
இலங்கை

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!
இலங்கை

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
Next Post
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம்!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம்!

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்!

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி - வழங்கு விசாரணை தவணையிடப்பட்டுள்ளது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

0
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

0
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

0
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

0
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-09-16
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

2026-09-16
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-16
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

2026-09-16
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

2026-09-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.