யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) இரவு, அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது சந்தேகநபர்கள் சிலர், பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்தவர்களால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டமையினால், பெரியளவிலான சேதங்கள் ஏற்படவில்லை. ஆனாலும் வீட்டின் முன் பக்க ஜன்னல் கண்ணாடிகள் சில உடைத்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டாரால் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
















