• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

உலகவாழ் பக்தர்களின் வழிபாட்டுக்காக ‘சந்தஹிரு சே ரந்துன்’ திறந்து வைப்பு

1.062 Views
4 years ago
74 0
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    0 Subscriber

    அநுராதபுரம் “சந்தஹிரு சே ரந்துன்” தாது கோபுரத்தை, உலகெங்கிலுமுள்ள பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வு, நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

    தாய் நாட்டின் ஒற்றுமைக்காகப் பெரும் தியாகங்களைச் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையிலும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு ஆசிர்வதிப்பதற்கும், முப்பது வருடகால யுத்தத்தின் நிறைவைக் குறிக்கும் வகையிலும், ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கமைய, அன்றைய பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் “சந்தஹிரு சேய” தாது கோபுரம்  நிர்மாணிக்கப்பட்டது.

    முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினருடன், ஏனைய பலரும் இதற்கு நிதி மற்றும் உடல் ரீதியிலான பங்களிப்புகளை நழ்கியுள்ளனர்.

    கி.பி 301 இல் மகாசேன மன்னனால் அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜேதவனாராம விஹாரையை அடுத்து இந்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட அதி விசாலமான தாது கோபுரம் இதுவாகும்.

    2010.11.22ஆம் திகதி “சந்தஹிரு சே” தாது கோபுரத்துக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, 2014.11.22 இல் புண்ணிய சின்னம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    282 அடி 6 அங்குலம் உயரமான இதன் சுற்றுவட்டம் 800 அடிகளாகும். குமிழி வடிவத்திலான இந்தத் தாது கோபுரத்தில், கப்பிலவஸ்து புண்ணிய சின்னம் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.

    தாது கோபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சூடா மாணிக்கத்தின் உயரம் 3 அடி 6 அங்குலமாகும். இங்கு 1895 மாணிக்கக் கற்கள், தங்கம் மற்றும் முத்து என்பன பதிக்கப்பட்டுள்ளன.

    பிரித் பாராயணத்துடனும் தேவ ஆராதனையுடனும் “சந்தஹிரு சே ரந்துன்” தாது கோபுரம், ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் திறந்து வைக்கப்பட்டது. மஹாசங்கத்தினர் உள்ளிட்ட பிரதம அதிதிகள், தாது கோபுரத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

    தாது கோபுரத்துக்கு ஆபரணம் அணிவித்தல், புண்ணிய விளக்கேற்றுதல் “சந்தஹிரு சே ரந்துன்”ஐ சம்புத்த சாசனத்துக்கு அர்ப்பணித்தல் மற்றும் மின்விளக்கு வழிபாடுகள் என்பன, ஜனாதிபதியினால் நிகழ்த்தப்பட்டன.

    தாது கோபுரத்துக்கு முதலாவது கிலன்பச (ஆகாரம்) பூஜை “சந்தஹிரு சேய” வரலாறு அடங்கிய நூலை கையளித்ததோடு, பக்திப் பாடலும் இசைக்கப்பட்டது.

    மல்வத்து தரப்பின் அனுநாயக்கர் கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜத்தசிறி தேரர் மற்றும் அஸ்கிரி தரப்பின் அனுநாயக்கர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர் ஆகியோர் விசேட அனுசாசன உரையை ஆற்றியதுடன், இராணுவ வீரர்கள் செய்த அர்ப்பணிப்பைப் பாராட்டிச் செயற்படுத்திய மாபெரும் புண்ணிய விடயமாக, “சந்தஹிரு சேய” உலகுக்கு எடுத்துக்கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

    இந்தத் தாது கோபுரத்தை வழிபடும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணித்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் நன்மைகள் சென்றடைவதாக, இதன்போது உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

    இந்நாட்டுப் பிரஜைகளின் பிள்ளைகளான எமது பாதுகாப்புப் படையினர் தொடர்பில் தமக்கு முழுமையான நம்பிக்கை இருந்தது என்று தெரிவித்த பிரதமர், பாதுகாப்புப் பிரிவு பிரதானிகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பிரிவை, அன்று பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷ மிகச் சரியாக வழிநடத்தி, நாட்டில் அமைதியை உருவாக்கும் பொறுப்பை நிறைவேற்றினார் என்றார்.

    இரத்த ஆற்றை நிறுத்தி, மரண பயத்தை இல்லாதொழித்து, இந்நாட்டை அமைதிப் பூங்காவாக்கிய இராணுவ வீரர்களுக்காக இந்த “சந்தஹிரு சேய” தாது கோபுரத்தை உலகெங்கிலுமுள்ள பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறந்து வைத்து, எதிர்காலத்தில் எந்தவொருச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறான விடயங்கள் நடைபெறக் கூடாதென்று பிரார்த்தித்ததாகவும், பிரதமர் குறிப்பிட்டார்.

    எமது நாடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், எமக்கு எமது நாட்டில் வாழ்வதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும். எமது நாட்டின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்த இராணுவ வீரர்களின் பாதுகாப்பும் உயிர்த் தியாகம் செய்து எமக்குப் பெற்றுத்தந்த சுதந்திரத்தைப் பாதுகாப்பது, தற்காலத்திலும் எதிர்காலத்திலும் உருவாகின்ற தலைவர்களின் பொறுப்பாகுமென்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

    “சந்தஹிரு சே ரந்துன்” தாது கோபுரத்தை நிர்மாணிக்கும்போது செய்த சேவையைப் பாராட்டி, ஜனாதிபதியினால் முப்படையினருக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank

    Related

    Category: இலங்கை கொழும்பு முக்கிய செய்திகள்
    Tags: அநுராதபுரம்சந்தஹிரு சே ரந்துன்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!
    இலங்கை

    வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!

    2025-07-12
    இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!
    இலங்கை

    இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

    2025-07-12
    இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
    இலங்கை

    இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!

    2025-07-12
    ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான தரப்பினருடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!
    இலங்கை

    ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான தரப்பினருடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

    2025-07-12
    இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!
    இலங்கை

    இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

    2025-07-12
    தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் கை எழுத்துப்போராட்டம்!
    இலங்கை

    தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் கை எழுத்துப்போராட்டம்!

    2025-07-12
    Next Post
    ஜோர்ஜியாவில் கொவிட் தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

    ஜோர்ஜியாவில் கொவிட் தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.