• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையேற்படும் – இரா.துரைரெட்னம் எச்சரிக்கை!

1.035 Views
4 years ago
72 0
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    0 Subscriber

    அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பௌத்த சாசன அமைச்சு முறையான நடவடிக்கையினை எடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் அவர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்கவேண்டிய நிலையேற்படும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பௌத்த மதகுருவொருவரால் கடந்த 15ஆம் திகதி அரசாங்க உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத்தனமான செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றேன்.

    குறித்த பௌத்தகுரு ஒரு வருடகாலத்திற்குள் இலுப்படிச்சேனை, பிள்ளையாரடி பகுதியில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் கடந்த காலத்தில் மாவட்ட செயலகம், பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளருக்கு எதிராகவும் கெவிழியாமடு பகுதியில் கிராம சேவையாளருக்கு எதிராகவும் கடந்த 15ஆம் திகதி பட்டிப்பளை பிரதேச செயலாளருக்கு எதிராகவும் தொடர்ச்சியான முறையற்ற வகையில் வன்முறைத்தனமாக செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

    குறித்த மதருவின் செயற்பாடானது பௌத்தமதகுருவின் கொள்கைக்கு எதிரான வகையில் இவரின் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கை அரசாங்கம் ஒரு பார்வையாளர் போன்று இவரின் செயற்பாட்டை பார்த்துவருகின்றது.

    இந்த மதகுருவினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வெறுக்கின்றார்கள். மதருவுக்குரிய மனிதாபிமானமோ, கொள்கையோ, கொள்கையோ இவரிடமில்லை. இவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பௌத்த சாசன அமைச்சு முறையான நடவடிக்கையினை எடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் தேரர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்கவேண்டிய நிலையேற்படும்.

    கடந்த காலங்களில் இயற்கை விவசாயத்தினை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் செயற்கை உரத்தினை விவசாயத்திற்கு பயன்படுத்திதற்கான பொறுப்பினை இந்த நாட்டின் அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும்.

    இயற்கை உரத்தினையும் இலைகுழையையும் கொண்டு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த மட்டக்களப்பு விவசாயிகளை இரசாயண உரத்திற்கு மாற்றியது இந்த அரசாங்கமேயாகும்.

    இந்த அரசாங்கத்தின் தேசிய ரீதியான கொள்கைகளில் பல தவறுகள் இருக்கின்றன. மாறிமாறிவரும் அரசுகள் விவசாயம் தொடர்பான கொள்கைகளை மாற்றுவதன் ஊடாக பாதிக்கப்படுவது இந்த மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்பதை இந்த அரசாங்கம் மறந்துவிடக்கூடாது.

    இயற்கை உரத்திற்கு மட்டக்களப்ப மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு இல்லை. ஆனால் ஆனால் முழுமையாக இயற்கை உரத்தினை மட்டுமே பாவிக்கவேண்டும் என்ற அழுத்ததிற்கே இந்த மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

    படிப்படியாகவே இந்த செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். உடனடியாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு இரசாயண உரத்தினை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

    இந்த நாட்டில் அரசாங்க உத்தியோகத்தர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல், விலையேற்றம் என பல்வேறு நெருக்கடிகளினால் அரசாங்க ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் வெளியிடப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களுக்கு எந்தவித ஒதுக்கீடும் செய்யப்படாதது இந்த அரசாங்கத்தின் மோசமான ஏமாற்று செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.

    வரவு செலவு திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு நிதியொதுக்காத காரணத்திற்காக வடகிழக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதை மீள்பரிசீலனை செய்யவேண்டும்.

    எதிர்வரும் காலத்தில் குறைநிரப்பு பிரேரணை ஊடாகவேணும் நிதிகளை அரசாங்க ஊழியர்களுக்கு ஒதுக்கும் வாய்ப்புகள் உள்ள நிலையில் அதற்கான செயல்வடிவத்தை கொடுக்க ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

    வரவு செலவுத்திட்டம் ஊடாக புரியாத விடயங்களை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.அரசாங்க உத்தியோகத்தர்களின் வயதெல்லை 65 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் தொழில்வாய்ப்பினை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பினை இல்லாமல் செய்யும்.

    வயதெல்லை 65வரையில் அதிகரிக்கப்பட்ட விடயத்தில் அரசாங்கம் மீள்பரிசீலனைசெய்து இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு வழியேற்படுத்தவேண்டும்.

    அத்துடன் அமைச்சர் ஒருவர் அரசாங்க உத்தியோகத்தர்களை நலினப்படுத்தக்கூடியவாறு தெரிவித்த கருத்து அரசாங்க உத்தியோகத்தர்களை காயப்படுத்தியுள்ளது. குறித்த கருத்தினை அமைச்சர் வாபஸ்பெற்று அரசாங்க உத்தியோகத்தர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்.

    நாற்பது வருடங்களாக அரசியலில் இருந்த முதிர்ச்சியுள்ள தேசிய அரசியலில் பங்குகொண்ட அரசியல்வாதி யாரும் இந்த அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தினை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    இந்த காலத்திலேயே இலங்கையில் பொருட்களின் உச்சக்கட்ட விலையேற்றமும் பொருட்களின் விலையேற்றத்தினை கட்டுப்படுத்தமுடியாமலும் திறைசேரியின் வருமானம் குறைந்த அளவு இருந்ததும், வெளிநாட்டு நாணயங்கள் தொடர்பான இழப்புகளும், சர்வதேச ரீதியான இராஜதந்திர செயற்பாடுகளில் பாதிப்புகளும் ஏற்பட்டு இலங்கை அரசாங்கம் தனது நிர்வாகத்தினை கொண்டுசெல்லமுடியாது நலினமடைந்துள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் நலன்கள் தொடர்புகொண்ட விடயங்களில் வரவு செலவு திட்டத்தில் நிதிகளை ஒதுக்கீடு செய்திருக்கவேண்டும்.

    இலங்கையில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்தினை அதிகரிக்கமுடியாத, ஆசிரியர்கள் தொடர்பான விடயத்தில் சம்பளத்தினை அதிகரிக்கமுடியாத, நிரந்தர நியமனங்களை வழங்கமுடியாத, அபிவிருத்திகளுக்கு நிதிகளை ஒதுக்கீடுசெய்யமுடியாத அரசாங்கம் தனது அரசை பாதுகாப்பதற்காக ஒரு சிலதுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது அவர்களுக்கு ஏற்புடையதாகயிருக்கலாம்.

    ஆனால் இதனை எந்தளவுக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்பது கேள்விக்குறியே. அரசாங்க உத்தியோகத்தர்கள் இந்த வரவு செலவு திட்டத்தினை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சமூகத்தினை கட்டியெழுப்பும் திட்டங்களும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை.பலதரப்பட்ட பாதிப்புகள் இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளன.

    வரவு செலவு திட்டத்தின் ஊடாக 65வீதத்திற்கு மேற்பட்ட நன்மைகள் மக்களுக்கு கிடைக்கவேண்டும். பாதுகாப்புக்கு பல்லாயிரக்கணக்கான கோடியை ஒதுக்கீடுசெய்துவிட்டு, வறுமைநிலையில் உள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டது என்பது வன்மையாக கண்டிக்ககூடிய செயற்பாடாகும்.

    இந்த வரவு செலவு திட்டத்தின் மீதான விமர்சனங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அதனை அரசாங்கம் மீள்பரிசீனை செய்யவேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Related

    Category: ஆசிரியர் தெரிவு இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு முக்கிய செய்திகள்
    Tags: இரா.துரைரெட்னம்மட்டக்களப்பு
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
    JUST IN

    அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

    2025-12-05
    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
    இலங்கை

    அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

    2025-12-05
    நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!
    இலங்கை

    நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

    2025-12-05
    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
    இலங்கை

    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

    2025-12-05
    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
    இலங்கை

    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

    2025-12-05
    5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!
    இலங்கை

    5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

    2025-12-05
    Next Post
    மட்டு நகரில் மனித பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் விற்பனை!

    மட்டு நகரில் மனித பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் விற்பனை!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.