• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/26
in ஆபிாிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
91 0
A A
0
39
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டடுள்ளது.

தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா இதனை உறுதி செய்துள்ளார்.

ஏற்கெனவே பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாக தேசிய தொற்றுநோய் நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே,

‘நாட்டில் கொரோனா 4ஆம் அலை வரும் டிசம்பா் அல்லது ஜனவரியில் தாக்கலாம். ஆனால் இந்த புதிய வகை வைரஸ் நோய்த்தொற்று பரவலை அதிகரித்து வருகின்றது.

கெளடெங் போன்ற மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த மாகாணங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்தாலும், அது டெல்டா வைரஸின் பிரிவுதான் என்பதால் அதை கட்டுப்படுத்திவிடலாம் என ஆரம்பத்தில் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம்.

ஆனால் இப்போது உருமாறிய புதிய வகை வைரஸ் பரவுவதை தெளிவாக அடையாளம் கண்டுவிட்டோம். நாம் எதிா்கொள்ளும் கண்ணுக்குப் புலனாகாத எதிரியை முன்கூட்டியே கணிப்பது மிகவும் சிரமம்.

பொருளாதார மையமான கெளடெங் நோக்கி தென்னாப்பிரிக்காவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனா். ஆகையால் அடுத்த சில நாள்களில் நோய்த்தொற்றுப் பரவலின் வீதம் அதிகரிக்க தொடங்கலாம்.

தென்னாப்பிரிக்க அரசும், கொரோனா கட்டுப்பாட்டு சபையும் வார இறுதி நாள்களில் சந்தித்து, உருமாறிய வைரஸின் உட்கூறுகள் குறித்தும், நோய்த்தொற்றுப் பரவல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டின் குவாசுலு நடால் ஆராய்ச்சி மற்றும் வகைப்படுத்துதல் மைய (கேஆா்ஐஎஸ்பி) இயக்குநா் பேராசிரியா் டுலியோ டி ஒலிவெய்ரா கூறுகையில், ‘‘ இன்று உலக சுகாதார அமைப்பின் பணிக்குழுவுடன் அமா்ந்து இந்த புதிய வகை வைரஸூக்கு கிரேக்க பெயரிடுவது குறித்து ஆலோசனை நடத்துவோம்.

தென்னாப்பிரிக்காவில் வெகு விரைவிலேயே இந்த வைரஸ் கண்டறியப்பட்டுவிட்டதால், இதன் தோற்றம் தென்னாப்பிரிக்காதான் என தீா்மானித்துவிட முடியாது.

கொரோனா வைரஸின் மரபணுவில் 30 இற்கும் மேற்பட்ட பிவுகள் காணப்படுகின்றன. ஆனால் ஏற்கெனவே கண்டறியப்பட்ட பிவுகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: கொரோனாதென்னாப்பிரிக்காஜோ பாஹ்லா
Share16Tweet10Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு
உலகம்

கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

2023-01-29
மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!
இலங்கை

தேர்தலுக்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்களை கடமையில்!

2023-01-29
விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழ ஆரம்பித்து விட்டோம் – ஜனாதிபதி ரணில்
இலங்கை

8 ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி !!

2023-01-29
மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!
இலங்கை

உள்ளூராட்சித் தேர்தல்: வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி அடுத்த வாரம்

2023-01-29
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் பீரிஸ் !
இலங்கை

இலங்கை பதிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது ஐ.நா.வின் உலகளாவிய காலமுறை மதிப்பாய்வு குழு!

2023-01-29
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர் – ஜனாதிபதி ரணில்
இலங்கை

அரசாங்க வேலைத்திட்டங்களை சீர்குலைத்தால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் – ஜனாதிபதி

2023-01-29
Next Post
பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்ன இந்த அரசாங்கம் மந்தகதியில் – ஆர்.ராஜாராம்

பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்ன இந்த அரசாங்கம் மந்தகதியில் - ஆர்.ராஜாராம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

2023-01-20
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கேள்வி!

2023-01-18
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

2023-01-15
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

2023-01-18
ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி நாளை உதயமாகின்றது?

ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி நாளை உதயமாகின்றது?

2023-01-12
கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

2023-01-29
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடினார் அர்யானா சபெல்க்கா

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடினார் அர்யானா சபெல்க்கா

2023-01-29
மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!

தேர்தலுக்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்களை கடமையில்!

2023-01-29
விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழ ஆரம்பித்து விட்டோம் – ஜனாதிபதி ரணில்

8 ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி !!

2023-01-29
மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

உள்ளூராட்சித் தேர்தல்: வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி அடுத்த வாரம்

2023-01-29

Recent News

கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

2023-01-29
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடினார் அர்யானா சபெல்க்கா

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடினார் அர்யானா சபெல்க்கா

2023-01-29
மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!

தேர்தலுக்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்களை கடமையில்!

2023-01-29
விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழ ஆரம்பித்து விட்டோம் – ஜனாதிபதி ரணில்

8 ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி !!

2023-01-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.