• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

பிரசித்தி பெற்ற அறிவிப்பாளர்களான தேஜானியும், சமீரும் Jaffna Kings அணியின் உத்தியோகபூர்வ தொகுப்பாளர்களாக இணைந்தனர்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/12/01
in கிரிக்கெட், விளையாட்டு
77 2
A A
0
ஜஃப்னா கிங்ஸ் அணியில் மூன்று தமிழ் வீரர்கள்!
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான Jaffna Kings அணியின் உத்தியோகபூர்வ தொகுப்பாளர்களாக புகழ்பெற்ற அறிவிப்பாளர்களான தேஜானி விஜேசிங்க மற்றும் சமீர் யூனுஸ் ஆகிய இருவரும் இணைந்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jaffna Kings அணியினால் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நன்கு அறியப்படுகின்ற தேஜானி விஜேசிங்க ஓர் சிறந்த ஊடகவியலாளராவார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தை தனது தொழில் வெற்றி வரை கொண்டு சென்று, ஊடகத்துறையில் அபரிமிதமான புகழைப் பெற்றுள்ள தேஜானி விஜேசிங்க, இளம் வயதிலேயே தனது தொழில் வாழ்க்கையில் நுழைந்து, இன்று தொகுப்பாளராக 21 வருட அனுபவம் கொண்டவராக ஊடகத் துறையில் மிளிர்கின்றார்.

அவர் தற்போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணி புரிகின்றார்.

திறமையான அழகிய குரல் வளமிக்க தேஜானி தொகுப்பாளராகவும், டப்பிங் கலைஞராகவும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் பல நிகழ்ச்சிகளை நேயர்களுக்கு வழங்கியுள்ளார்.

இன்று உலகில் விளையாட்டு மற்றும் அதனுடன் தொடர்பான துறையில் அறிவிப்பாளர்களாக ஒரு சில பெண்களே தமது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர். தேஜானியும் அவ்வாறான அரிய திறமையினை கொண்ட அறிவிப்பாளராவார்.

இலங்கையின் முன்னணி தனியார் செய்தி அலைவரிசையொன்றில் முன்னாள் செய்தி தொகுப்பாளராக இருந்த சமீர் யூனுஸ், இன்று புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாடசாலை மட்ட மற்றும் உள்ளக கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.

அவர் டிஜிட்டல் ஊடக தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். சில முன்னணி கிரிக்கெட் வீரர்களை நேர்கண்டுள்ள சமீர், இன்று கிரிக்கெட் வர்ணனைத் துறையில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

இவர் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் வர்ணனையாளராக செயற்பட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களின் கவனத்தை அவரால் ஈர்க்க முடிந்தது.

இளம் திறமைகளை வளர்த்தெடுக்கும் Jaffna Kings அணியின் நோக்கு இதன் மூலம் மேலும் உண்மைப்படுத்தப்படுகின்றது. தங்களின் பணி ஆடுகளத்தின் எல்லையுடன் மட்டுப்படுத்தப்படுவதில்லை என்பதை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துவதாகவே இந்த தெரிவு அமைந்துள்ளது.

விளையாட்டுடன் தொடர்பான இரு ஆற்றல்மிக்க குரல்கள் எம்முடன் இணைந்து இருப்பதால், 2021 தொடர் முழுவதும் கிரிக்கெட் இரசிகர்களுக்கு எவ்வித சோர்வும் இருக்காது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Jaffna KingsLPL
Share14Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நெஷனல் பேங்க் டென்னிஸ்: இரண்டாவது சுற்றில் டேன் எவண்ஸ் வெற்றி- செரீனா தோல்வி!
டெனிஸ்

நெஷனல் பேங்க் டென்னிஸ்: இரண்டாவது சுற்றில் டேன் எவண்ஸ் வெற்றி- செரீனா தோல்வி!

2022-08-11
மிட்செல் சான்ட்னரின் துல்லியமான பந்துவீச்சால் மே.தீவுகளை வீழ்த்தியது நியூஸிலாந்து!
கிரிக்கெட்

மிட்செல் சான்ட்னரின் துல்லியமான பந்துவீச்சால் மே.தீவுகளை வீழ்த்தியது நியூஸிலாந்து!

2022-08-11
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: வலுவான இந்திய அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: வலுவான இந்திய அணி அறிவிப்பு!

2022-08-09
22ஆவது பொதுநலவாய விளையாட்டுத் தொடர் இனிதே நிறைவு!
விளையாட்டு

22ஆவது பொதுநலவாய விளையாட்டுத் தொடர் இனிதே நிறைவு!

2022-08-09
தொடர்ந்தும் அவுஸ்ரேலியா முதலிடத்தில்
விளையாட்டு

தொடர்ந்தும் அவுஸ்ரேலியா முதலிடத்தில்

2022-08-08
59 ஓட்டங்களினால் வெற்றி: தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா அணி !
கிரிக்கெட்

59 ஓட்டங்களினால் வெற்றி: தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா அணி !

2022-08-07
Next Post
நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !

2022-07-09
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2022-07-11
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்பாரா ஜனாதிபதி? – இறுதி முடிவு இன்று!

போர்க் குற்றச்சாட்டை கையிலெடுத்த சிங்கப்பூர்: சற்று முன்னர் வெளியேறினார் கோட்டா !

2022-08-11
பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது!

பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது!

2022-08-11
பொதுமக்கள் மீது சுமையை திணிக்கமாட்டோம் – அரசாங்கம்

காட்டு யானைகளின் வாழ்விடங்களில் காணி அபிவிருத்தி இல்லை

2022-08-11
ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் எழுத்துமூல ஆவணம் கையளிப்பு!

ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் எழுத்துமூல ஆவணம் கையளிப்பு!

2022-08-11
பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை

பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை

2022-08-11

Recent News

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்பாரா ஜனாதிபதி? – இறுதி முடிவு இன்று!

போர்க் குற்றச்சாட்டை கையிலெடுத்த சிங்கப்பூர்: சற்று முன்னர் வெளியேறினார் கோட்டா !

2022-08-11
பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது!

பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது!

2022-08-11
பொதுமக்கள் மீது சுமையை திணிக்கமாட்டோம் – அரசாங்கம்

காட்டு யானைகளின் வாழ்விடங்களில் காணி அபிவிருத்தி இல்லை

2022-08-11
ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் எழுத்துமூல ஆவணம் கையளிப்பு!

ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் எழுத்துமூல ஆவணம் கையளிப்பு!

2022-08-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.