• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்த்திருத்தங்கள் பல அவசியமென ஜனாதிபதி தெரிவிப்பு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/12/09
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
76 0
A A
0
உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்த்திருத்தங்கள் பல அவசியமென ஜனாதிபதி தெரிவிப்பு
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி, “பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்திலேனும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதோடு, தற்கால உலகை வெற்றிகொள்வதற்கு அவசியமான ஏனைய திறன்களையும் பெற்றிருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

நமது பல்கலைக்கழகங்களால், ஏற்கெனவே பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர் தொகையைப் பத்தாயிரத்தால் அதிகரித்தமை தற்போதைய அரசாங்கம் அடைந்த பாரிய வெற்றியாகுமென்றும், அவ்வாறு அதிகரித்தாலும்கூட, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும், பல்கலைக்கழகக் கல்வியைப் பெறமுடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னமும் இருக்கின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்குக் காரணம், தகுதிபெறும் அனைத்து மாணவர்களுக்கும் இடமளிப்பதற்கு அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் போதுமான கொள்ளளவின்மையாகும்.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எமது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாத்திரம் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகில் உள்ள அனைத்துச் சிறந்த பல்கலைக்கழகங்களும், அரச பல்கலைக்கழகங்கள் அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

ஆட்சேபனைகள் முட்டாள்தனமானவை என்பதோடு, பட்டப்படிப்புக்குப் பிறகு தொழிற்சந்தையில் வாய்ப்புகளை வழங்க முடியாத பல்கலைக்கழகங்களை மாணவர்கள் நாட மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“நாட்டில் மூன்றாம் நிலைக் கல்விக்கான சுதந்திரமான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், சர்வதேசத் தரம்வாய்ந்த பிராந்திய உயர்க்கல்வி நிறுவனங்களை இலங்கைக்குள் ஈர்க்க முடிவதோடு, அதன் மூலம் இந்நாட்டில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும்.

“காலப்போக்கில், இது இலங்கையின் உயர்க்கல்வித் துறையை பொருளாதாரத்துக்குச் சாத்தியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்ற வருமானம் ஈட்டக்கூடிய ஒரு வழியாக மாறும்” என்று நம்பிக்கைத் தெரிவித்த ஜனாதிபதி, நாடு விரைவாக அபிவிருத்தியடைந்து, எதிர்காலத்தில் வளமான நாடாக மாற வேண்டுமாயின், இலங்கைக்கு அவசியப்படுவது உயர்க்கல்வி கட்டமைப்பில் பரந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

பாதுகாப்புக் கல்வி, முகாமைத்துவம், வர்த்தக மேலாண்மை, சட்டம், மருத்துவம், பொறியியல் மேம்பாட்டு முகாமைத்துவம், தொழில்நுட்ப விஞ்ஞானம், சமூகவியல், இணை சுகாதார விஞ்ஞானம் மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் 1,408 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இவர்களில் கலாநிதிப் பட்டதாரி ஒருவரும் பட்டப் பின்படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா ஆகியோரும் அடங்குவர். இதன்போது, 1,180 பேர் தமது முதல் பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர்.

Tags: மறுசீரமைப்புஜனாதிபதிஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!
இலங்கை

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

2022-05-22
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !
இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !

2022-05-22
கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.
இலங்கை

கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.

2022-05-22
அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு
அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு

2022-05-22
டெல்லி கப்பிட்டல்ஸ் அணி தோல்வி : மும்பை அணியின் வெற்றியால் பிளே ஒப்க்குள் நுழைந்தது பெங்களூர் !
கிரிக்கெட்

டெல்லி கப்பிட்டல்ஸ் அணி தோல்வி : மும்பை அணியின் வெற்றியால் பிளே ஒப்க்குள் நுழைந்தது பெங்களூர் !

2022-05-22
ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்!!!
இலங்கை

ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்!!!

2022-05-22
Next Post
2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்க தீர்மானம்

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
edit post
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
edit post
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
edit post
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
edit post
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
edit post
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

2022-05-22
edit post
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !

2022-05-22
edit post
கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.

கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.

2022-05-22
edit post
கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

2022-05-22
edit post
அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு

அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு

2022-05-22

Recent News

edit post
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

2022-05-22
edit post
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !

2022-05-22
edit post
கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.

கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.

2022-05-22
edit post
கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

2022-05-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.