• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
திபெத்தில் அதிகரிக்கும் கலாசார இனப்படுகொலை?

திபெத்தில் அதிகரிக்கும் கலாசார இனப்படுகொலை?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/12/23
in ஆசியா, உலகம்
82 1
A A
0
35
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

திபெத்தின் மீதான சீனப் படையெடுப்பின் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடி, சீன மொழி மற்றும் கலாசாரத்தைக் கற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை ஏற்க வேண்டும் என சீனா அழைப்பு விடுத்துள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், திபெத்தியர்களை அதிகாரப்பூர்வ சீன மொழியான மெண்டரின் மொழியைக் கற்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் புதிய நவீன சோசலிச திபெத்தையும், திபெத்திய மக்கள் சீன மயமாக வேண்டும் என்றும் கோரினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இமயமலைப் பகுதியில் தனது இரும்புக் கரங்களால் கலாசார இனப்படுகொலை செய்து வருகின்றது. வெகுஜன இணக்கத்தை உறுதி செய்வதாக கூறிக்கொண்டு தன்னாட்சி பிராந்தியத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி புதிய கொள்கைகளை செயற்படுத்தி வருகின்றது.

திபெத்தில், தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் இப்போது கோவில்களுக்குச் செல்வது மற்றும் ஜெபமாலை மணிகள், பிற மதப் பொருட்களைப் பயன்படுத்துவது ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளதோடு அவை தொடர்பில் கண்காணிப்புச் செயற்படுகளும் அதிகரித்துள்ளன.

கொள்கை ஆய்வுக்குழுவின் தகவல்களின் படி, பெய்ஜிங் இந்தச் சட்டங்களை மீறும் திபெத்திய பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து புகாரளிக்க ஒவ்வொரு அலுவலகத்திலும் சமூகத்திலும் சிறப்பு முகவர்களை நியமித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் அல்லது நடைமுறைகளில் ஈடுபடும் எந்தவொரு நபரும் அரசாங்க ஊழியர்களாக இருந்தால் அதிலிருந்து நீக்கப்படுதல், அவருக்கான அனைத்து சிறப்பு உரிமைகளையும் மறுத்தல் மற்றும் கைது செய்யப்படுதல் உள்ளிட்டவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

நாட்டின் கலாசார மரபுரிமையை ஒழிப்பதற்காக, திபெத்திய மொழி இனி பாடசாலைகளில் கற்பிக்கப்படுவதில்லை என்றும் அதற்கு பதிலாக, மெண்டரின் மொழி கற்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த பிக்குகளும் போலியாக முன்வைக்கப்படும் குற்றங்களுக்காக துன்புறுத்தப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, கல்வி அமர்வின் போது பணியாளர்களுடன் தர்க்கம் செய்ததற்காக இரண்டு துறவிகள் முறையே 17 மற்றும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி திபெத்திய எழுத்தாளரும் கல்வியாளருமான கோ ஷெராப் கியாட்சோ, ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

திபெத்தின் மீது சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் படையெடுத்து அதன் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் 1951 முதல் இமயமலைப் பகுதியை சீனா ஆட்சி செய்து வருகிறது.

மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலாசார ஒருங்கிணைப்பை நோக்கிய இத்தகைய நகர்வுகள் திபெத்தின் பாரம்பரிய பௌத்த கலாசாரத்தின் அழிவை உச்சரிக்கின்றன.

கடந்த 70 ஆண்டுகளில் திபெத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வைத்துப் பார்த்தால், திபெத்தியர்களின் மகிழ்ச்சி அடைவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லாத நிலைமைகளே நீடிக்கின்றன.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைப்பொன்றின் அறிக்கையில். 70ஆண்டுகால அடக்குமுறைக்குப் பிறகு, திபெத்திய மக்களுக்கு இன்று முதல் சீனாவின் மிருகத்தனமான செயற்பாடுகளில் இருந்து அமைதியான விடுதலை தேவைப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

பெய்ஜிங் தலாய் லாமாவை ஒரு ஆபத்தான பிரிவினைவாதி என முத்திரை குத்துகிறது, அதற்காக, தலாய் லாமாவை திபெத்தின் மிக உயர்ந்த மத நபராக பிரசாரம் செய்கின்றது. சீனாவின் கம்யூனிச ஆட்சிக்கு சவால் விடும் வகையில் திபெத்திய மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக தலாய் லாமா இருந்துள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பதைக் கட்டுப்படுத்துவது முக்கிய விடயமாக உள்ளது.

இதனால், திபெத், ஜனாதிபதி ஷி உட்பட கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடமிருந்து தொடர்ந்து கவனத்தைப் பெற்றது. சீனாவின் சோசலிச சமுதாயத்திற்கு ஏற்ப திபெத்திய பௌத்தம் வழிநடத்தப்பட வேண்டும் மற்றும் சீன சூழலில் வளர்க்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஷி கடந்த ஆண்டு கூறினார்.

இந்த ஆண்டு மே மாதம், தலாய் லாமாவின் வாரிசு யாராக இருந்தாலும் பெய்ஜிங்கால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சீனாவும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையின்படி, கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் ஆளும் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு அடுத்த தலாய் லாமாவை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள திபெத்திய சமூகத்திற்குள் இருந்து தலாய் லாமா தனது வாரிசை தேர்ந்தெடுக்கலாம் என்பது சீனாவின் மிகப்பெரிய அச்சம்.

தலாய் லாமா திபெத்திற்கு வெளியே ஒரு வாரிசைக் கண்டால், சீனா நியமிக்கும் வாரிசு சட்டபூர்வமான தன்மையையும் திபெத்தில் பயனுள்ள செல்வாக்கைச் செலுத்தத் தேவையான ஆன்மீக அதிகாரத்தையும் அனுபவிக்க மாட்டார். இதுவே சீனாவின் அச்சத்திற்கு காரணமாக உள்ளது.

Related

Tags: சீன மொழிதிபெத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

Galle Gladiators அணிக்கு வெற்றியிலக்காக 202 ஓட்டங்கள்!

Next Post

கிளிநொச்சியிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு!

Related Posts

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!
உலகம்

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!

2026-01-25
இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !
அமொிக்கா

இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !

2026-01-25
அமெரிக்க இராணுவத்தில் இணைகிறது எப் – 47 மிகவும் அபாயகரமான போர் விமானம்!
அமொிக்கா

அமெரிக்க இராணுவத்தில் இணைகிறது எப் – 47 மிகவும் அபாயகரமான போர் விமானம்!

2026-01-25
(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!
இங்கிலாந்து

(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!

2026-01-25
கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!
இங்கிலாந்து

கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!

2026-01-25
இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல விரும்பும் கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் !
இங்கிலாந்து

இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல விரும்பும் கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் !

2026-01-25
Next Post
கிளிநொச்சியிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு!

கிளிநொச்சியிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு!

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களாக காலையிலும் மாலையிலும் இருவர் பதவியேற்பு!

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி!

இரண்டாவது முறையாகவும் LPL கிண்ணத்தினை முத்தமிட்டது Jaffna Kings

இரண்டாவது முறையாகவும் LPL கிண்ணத்தினை முத்தமிட்டது Jaffna Kings

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

0
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

0
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

0
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

0
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

2026-01-25
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

2026-01-25
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

2026-01-25
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

2026-01-25
மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

2026-01-25

Recent News

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

2026-01-25
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

2026-01-25
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

2026-01-25
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

2026-01-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.