• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

இலங்கைக்கு வரும் சீன வெளிவிவகார அமைச்சரின் இலக்கு என்ன?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/06
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள்
83 1
A A
0
42
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தரவுள்ளார்.

சீனாவுக்கும், இலங்கைக்கும் இருதரப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65ஆண்டுகளாகின்றன.

அதனை முன்னிட்டு ஏற்பாடாகியுள்ள நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே அவர் வருகை தருகின்றார் என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்திருக்கின்றது.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இலங்கைக்கு வருவது இது முதற்தடவை அல்ல. இதற்கு முன்னரும் வருகை தந்திருக்கின்றார். சந்திப்புக்களை நடத்தியிருக்கின்றார்.

குறிப்பாக, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்றாவது தடவையாக இப்போது வருகின்றார்.

இதற்கு முன்னதாக, 2020 ஜனவரியில் வருகை தந்திருந்தார். பின்னர் கடந்த ஆண்டு ஜுனில் வருகை தந்திருந்தார். இப்போது ஆண்டின் முதல் மாதத்திலேயே வருகை தருகின்றார்.

இதற்கிடையில் சீனாவின்  கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினரான யாங் யீச்சியும், 2020இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பின்னர், சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் 2021 மே மாதம், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயங்கள் அனைத்துமே சீன, இலங்கை இருதரப்பு உறவுகள் என்பதற்கு அப்பால் சீனாவின் நலன்களை மையப்படுத்தியவை என்பது தான் மிகவும் முக்கியமான விடயமாகும்.

ஏற்கனவே, சீனா இலங்கையில் ஆழமாக கால்பதித்துள்ள நிலையில் அண்மையில் ஏற்பட்ட ‘சீன உரம்’ குறித்த முரண்பாடுகளால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரசல்கள் இல்லாமலில்லை.

இந்த நிலையில் தான் இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் ஆண்டு நிறைவொன்றை கொண்டாடுவதற்கு சீனாவின் வெளிவிவகார அமைச்சரே நேரில் வருகின்றார்.

இதுவெறுமனே கொண்டாட்டத்திற்கான வருகை அல்ல. அதனையும் தாண்டி சில விடயங்கள் உள்ளன. குறிப்பாக, இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் அண்மையில் வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதில், அவர் மன்னார் ஊடாக இராமர் அணையை அண்மித்துள்ள மணற்திட்டு வரையில் சென்றமை முக்கிய விடயமாக பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பருத்தித்துறைக்குச் சென்றார். கௌதாரி முனைக்குச் சென்றார். அதற்கான காரணங்கள் வெளியாகவில்லை.

உண்மையிலேயே, சீனா வடக்கில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் மற்றும் நகரை அபிவிருத்தி செய்தல், கௌதாரிமுனையில் காற்றாலை மின்சக்தி திட்டங்களில் முதலீடு செய்தல் ஆகியவற்றில் கரிசனை கொண்டிருக்கின்றது. அதற்கான சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை,  கொழும்பிலும் யுகதநவி மின்திட்டம் குறித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் தரப்பின் மூன்று அமைச்சர்கள் உயர் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

நீதிமன்றம் அந்த உடன்பாட்டை சவாலுக்கு உட்படுத்தி அமெரிக்கா உடன்படிக்கையை கைவிட்டால் அதனைப் பெற்றுக்கொள்வதில் சீனா ஆர்வத்துடன் இருக்கின்றது.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுவர் பாலித கொஹன்ன, யுகதநவி மின்திட்டத்தில் சீனா ஆர்வமாக இருக்கின்றது என்ற விடயத்தினை பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றார்.

ஆகவே, சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயம் வெறுமனே இராஜதந்திர ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் என்பதற்கு அப்பால் இலங்கையில் மேலும் அழுத்தமாக தமது கால்களை பதிப்பதாகும்.

குறிப்பாக வடக்கில் தமது கால்களை அகலமாக வைத்துக்கொள்வதாகும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது.

எவ்வாறாயினும், சீன வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு முன்னதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் 45 விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார். குறிப்பாக, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் அதிக வட்டி விகிதத்தில் இருந்து சீனாவுக்கு பலனளித்த ஒரேயொரு திட்டம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி திட்டத்தை விட ஏனைய திட்டங்கள் அனைத்தும் வெறும் வீண்செலவுகள் எனவும், சீனா இலங்கையை பாரிய கடன் வலையில் சிக்க வைத்துள்ளதாகவும் அவர் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஜனநாயக முறைமையின் கீழ் நீக்கப்படும் என்றும் இதன்போது கடந்த 15 வருட காலத்தில் சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மீண்டும் ஆராயப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் தேர்தல்கள் மக்களின் கருத்துக்கணிப்புடனேயே நடைபெறும் என்றும் இதன் போது ஊழல் மோசடிகள் காணப்படும் அனைத்து உடன்படிக்கைகளும் இரத்துச் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு  சீனாவுக்கும் இடையிலான நட்புறவு இனி நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் செலன்திவா நிறுவனம் ஊடாக ஏதேனுமொரு சொத்தை கையகப்படுத்தினாலும் அது ஆரம்பத்திலிருந்தே இரத்தாகும் என்பதனை நினைவிற்கொள்ளுமாறு குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, சீனா, ஆழமாக கால்பதிக்க விரும்பினாலும், அதற்கு தற்போது தென்னிலங்கை அரசியல் தரப்பிலிருந்தே பகிரங்கமாக எதிர்ப்பலைகள் வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளன.

இந்தப் பின்னணியில் தற்போதைய அரசாங்கம் சீனாவின் கைகளை மேலும் இறுகப் பற்றுமானால், அது ‘கடன்பொறிக்குள்’ சிக்குவதையும், தென்னிலங்கை மக்களின் ‘எழுச்சிக்கு’ வித்திடுவதையும் தவிர்க்க முடியாது போகும்.

அவ்விதமான நிலைமையானது, அரசாங்கத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கைக்கும் ‘சிவப்பு’ சமிக்ஞை தான்.

-யே.பெனிற்லஸ்-

Related

Tags: இலங்கைசீனாசீனாவின் வெளிவிவகார அமைச்சர்வெளிவிவகார அமைச்சர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தானது!

Next Post

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்!

Related Posts

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.
இலங்கை

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-06-15
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!
இலங்கை

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

2025-06-15
கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!
இலங்கை

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

2025-06-15
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2025-06-15
இலங்கை

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு!

2025-06-15
Next Post
தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் நாளை – உறுதிப்படுத்தினார் மனோ!

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என அறிவிப்பு!

சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்!

சீன வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

0
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

0
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

0
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

0
போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

0
விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-06-15
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

2025-06-15
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

2025-06-15
போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

2025-06-15

Recent News

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-06-15
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

2025-06-15
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

2025-06-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.