• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
கொழும்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு – கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் CID விசாரணை!

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு –  விசாரணைகள் தொடர்வதாக அறிவிப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/14
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
76 1
A A
0
37
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த வி்டயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொரளை பொலிஸார் முதலில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட விதிகளுக்கு இணங்க, உரிய சிசிடிவி காட்சிகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிவியல், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் சான்றுகள் மற்றும் தனிப்பட்ட சான்றுகள் மூலம் சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களின் துணையுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விசாரணைகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

தேவாலயத்திற்கு கைக்குண்டை கொண்டு வந்த நபர் அல்லது நபர்கள், சதியின் பின்னணியிலுள்ள நோக்கம் மற்றும் அதற்கு உதவியவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த நபர்கள் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான உண்மைகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான மேலதிக அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும் கூடிய விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள தேவாலய வளாகத்தில் திருச்சொரூபத்திற்கு அருகிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கைக்குண்டொன்று மீட்கப்பட்டது.

பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் கெம்பல் மைதானத்தில் அன்றைய தினமே குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தெமட்டகொட பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருடன் தொடர்புகளை பேணியுள்ளதுடன், கைக்குண்டை தேவாலய வளாகத்திற்குள் வைத்தமையுடன் தொடர்புபட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் மூன்று சந்தேகநபர்கள், தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கைக்குண்டுபொரளைபொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தைபொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

Breaking news : நாட்டின் எந்த பகுதியிலும் இன்றிரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

Next Post

மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!

Related Posts

ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !
இலங்கை

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!
இலங்கை

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!
இலங்கை

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
இலங்கை

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!
இலங்கை

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

2025-12-07
மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!
இலங்கை

மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!

2025-12-07
Next Post
மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!

மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!

மே மாதத்தில் க.பொ.த. சாதாரண தரத்திற்கான செயன்முறை பரீட்சை !!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!

ரஷ்யா அடுத்த 30 நாட்களுக்குள் உக்ரைன் மீது தரைப்படை ஆக்கிரமிப்பை தொடங்கும்: அமெரிக்கா தகவல்!

ரஷ்யா அடுத்த 30 நாட்களுக்குள் உக்ரைன் மீது தரைப்படை ஆக்கிரமிப்பை தொடங்கும்: அமெரிக்கா தகவல்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

0
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

0
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

0
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

0
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

0
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

2025-12-07

Recent News

ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.