• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள்- மக்களிடம் முதல்வர் கோரிக்கை

நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடியது – தமிழக முதலமைச்சர்

Dhackshala by Dhackshala
2022/02/08
in இந்தியா, தமிழகம்
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு என்றும் அது ஒரு பலிபீடம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு சட்டமூலத்தை ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், நீட் விலக்கு சட்டமூலத்தை மீண்டும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கூடியது.

கூட்டத்தில், நீட் விலக்கு சட்டமூலத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். பின்னர் சட்டமூலம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

இதன்போது, நீட் விலக்கு சட்டமூலம் மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்காக மட்டும் நாம் இங்கு கூடவில்லை. கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டவும் கூடியிருக்கிறோம். ஜனநாயகம் காக்க, கல்வி உரிமையை வென்றெடுக்க, கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட நாம் இன்று கூடியிருக்கிறோம்.

அந்தகவையில், எனது பொதுவாழ்வில் மறக்கமுடியாத நாளாக இந்நாள் அமைந்துள்ளது. நீட் என்ற சமூக அநீதியை அகற்ற இந்த சட்டப்பேரவையால் முடியும்.

தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்று 8 மாதத்துக்குள் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூடியிருக்கிறோம். 1968ல் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டி இருமொழிக்கொள்கை நிறைவேற்றினார் அண்ணா.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும். 8 கோடி மக்களை பிரதிபலிக்கக்கூடிய இந்த சட்டப்பேரவையில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும்.

நீட் தேர்வு ஒன்றும் அரசியலமைப்பு விதிப்படி உருவாக்கப்பட்டது அல்ல. நீட் தேர்வு கொண்டுவரப்பட்டபோது, 115 வழக்குகள் போடப்பட்டது, அதில் தமிழகம்தான் முதன்மை மாநிலம்.

அதன்படி, நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதனால், தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், 2016ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை மாற்றி வழங்கியது. இதன்பின்னர் நீட் தேர்வை பாஜக அரசு அமுல்படுத்தியது. நீட் தேர்வு முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு சாதகமானது. இதற்காக இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர். தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டது என்று சொல்லாம்.

நீட் தேர்வு மாணவர்களிடையே மருத்துவக் கனவில் தடுப்புச் சுவரை எழுப்புகிறது. உனக்கு தகுதி இல்லை என்று தடுக்கிறது.

நீட் தேர்வில் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2019 தேர்வில் 4 பேர், 2020ல் 5 பேர், 2021ல் 15 பேர் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் தேர்வு முறைகேடு வழக்கு போடப்பட்டுள்ளது.

பல்வேறு குளறுபடிகளுடன் ஏழை? எளிய மாணவர்களிடையே தகுதி என்ற பெயரில் ஓரங்கட்ட கொண்டுவரப்பட்ட தேர்வுதான் நீட் தேர்வு.

மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு, அது ஒரு பலிபீடம். அரியலூர் அனிதா உள்ளிட்ட மாணவச் செல்வங்களை நாம் நீட் தேர்வில் இழந்திருக்கிறோம். இந்திய மாணவர்களையும் பலி கொடுத்திருக்கிறது

நீட் தேர்வு குறித்து ஒட்டுமொத்த சமுதாயமும் மாணவர்களின் பெற்றோர்களின் நிலைப்பாட்டையே அரசு முன்வைத்திருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: நீட் தேர்வுமு.க.ஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு சட்டமூலம் தாக்கல் – பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 08 02 2022

Related Posts

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

2025-12-23
பங்களாதேஷ் பதட்டங்களால் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

பங்களாதேஷ் பதட்டங்களால் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

2025-12-23
இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

2025-12-22
ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

2025-12-22
அவசர சூழ்நிலையால் மும்பை நோக்கி புறப்பட்ட விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது!
இந்தியா

அவசர சூழ்நிலையால் மும்பை நோக்கி புறப்பட்ட விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது!

2025-12-22
ஜம்முவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பாடசாலை மாணவர்கள் காயம்!
இந்தியா

ஜம்முவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பாடசாலை மாணவர்கள் காயம்!

2025-12-21
Next Post
பத்திரிகை கண்ணோட்டம் 08 02  2022

பத்திரிகை கண்ணோட்டம் 08 02 2022

அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது - பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் கடுமையான வாய்த்தர்க்கம்!

நாடாளுமன்றத்தில் கடுமையான வாய்த்தர்க்கம்!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

0
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

0
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

0
சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

2025-12-23
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

2025-12-23
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025-12-23

Recent News

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

2025-12-23
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

2025-12-23
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.