வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது என்றும் காங்கிரஸ் இல்லையெனில் ஊழல் இருந்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக்கொள்ளுங்கள் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.