அண்மையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
அண்மையில் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கான பாதுகாப்பு வழங்கிய அதிகாரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவிருந்தது.
இந்நிலைமையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்ததோடு அவர்களின் பாதுகாப்பினை குறைக்க வேண்டாம் எனவும் அமைச்சர்களுக்காக பாதுகாப்பினை தொடர்ந்து வழங்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொதுவாக இரண்டு மெய்க்காப்பாளர்கள் மட்டுமே வழங்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது .