ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மொத்தம் 1.7 பில்லியன் பவுண்டுகள் (2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான வர்த்தகத்தை இலக்காகக் கொண்டு ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது புதிய பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து முழு அல்லது பகுதி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடைகளுக்கு உட்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பை 4 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் கொண்டு வரும்.
புதிய இறக்குமதி வரிகள் பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் உட்பட 1.4 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்களை உள்ளடக்கும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
‘திட்டமிட்ட ஏற்றுமதி தடைகள் ரஷ்ய பொருளாதாரத்தின் துறைகளில் 250 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை பாதிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2021ஆம் ஆண்டு நிலவரப்படி ரஷ்யாவிற்கு பிரித்தானியா செய்த மொத்த ஏற்றுமதியில் 10 சதவீதமாகும்.
பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ரஷ்யா முன்னணியில் இருப்பதாகவும், ஐக்கிய இராச்சியத்திற்கான அதனுடன் தொடர்புடைய இறக்குமதிகள் குறிப்பிடத்தக்கவை என்றும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டது.
புதிய கட்டுப்பாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள வர்த்தக தடைகளின் மூன்றாவது அலை ஆகும்.