• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சீனாவிடமிருந்து விலகிவரும் இலங்கை இந்தியாவை நெருங்குகிறது!

ஆட்சியாளர்களை இலக்கு வைக்கும் சீனாவின் புதிய முயற்சி?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/06/02
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள்
81 0
A A
0
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கும், சீனாவுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகள் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையில் 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தத்துடன் தான் ‘இராஜதந்திர உறவுகள்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், சீனா தனது கனவுத் திட்டமான ஒரே பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியினுள் இலங்கையை உள்வாங்குவதற்கு கடுமையான பிரயத்தனம் செய்தது. அதில் வெற்றியும் கண்டது. இதற்காக சீனா பல விலைகளை கொடுத்தது.

குறிப்பாக, கூறுவதானால் அரசியல்வாதிகளுக்கு இலவச பயிற்சிப்பட்டளைகள் என்ற பெயரில் சீனப்பயணங்கள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னெடுத்திருந்தது கடந்தகால வெளிப்படை உண்மைகளாக இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் இலங்கைக்கு சீனா பல்வேறு நிதி உதவிகளை வழங்கியிருக்கின்றது. அதில் நன்கொடைகளும் உண்டு. வட்டி அடிப்படையில் வழங்கியதும் உண்டு.

ஆனால் இவ்வாறு சீனா வழங்கிய நிதி உதவிகளின் பின்னால் ஏதோவொரு வகையில் காரணங்கள் ஒழிந்து கொண்டிருக்கும். அது நிச்சயமாக ‘சீன நலனை’ அடிப்படையாகக் கொண்டதாக தான் இருக்கும்.

இவ்வாறிருக்கையில், இலங்கை அண்மைய காலத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இதனால், சீனாவுக்கு மிக நெருங்கிய நண்பராக கருதப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவே பதவியில் இருந்து நீங்கியுள்ளார்.

தனது நெருங்கிய நண்பர் பதவியில் இருந்து இறங்குவதற்கான காரணத்தை கண்டறிந்தும் சீனா இம்முறை காப்பாற்றுவதற்கு முன்வரவில்லை என்பது தான் அதன் சாயத்தை வெளுக்கச் செய்திருக்கின்றது.

சீனாவைப் பொறுத்தவரையில், வடக்கில் கால்பதிப்பதற்கு அதிகளவில் பிரயத்தனம் செய்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக புதுப்பிக்க சக்தி உருவாக்கம் என்ற அடிப்படையில் குடாநாட்டுத் தீவுகளில் காலூன்ற முயன்றது. கூடவே மன்னாரிலும் தனது பார்வையை செலுத்தியது.

இருப்பினும், இலங்கைக்கு இந்தியாவுடன் காணப்பட்ட உறவுகளும், இராஜதந்திர உறவுகளின் ஊடாக ஏற்பட்ட அழுத்தங்களும் சீனாவின் முயற்சிக்கு ‘செக்’ வைத்து விட்டன. இது சீனாவைப் பொறுத்தவரையில் பெரும் பின்னடைவு தான்.

அதுமட்டுமன்றி கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு பிராந்தியத்தினை சீனா தன்னகத்தே வைத்திருக்கும் அதேவேளை, கிழக்கு முனையத்தினை இந்தியா, யப்பான் கூட்டுறவில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தினையும் இரத்துச் செய்வதற்கு திரைமறைவில் காரணமாக இருந்தது.

எனினும், பின்னர், இலங்கை இந்தியாவுக்கு கொழும்புத்துறைமுகத்தின் மேற்கு முனையத்தினை வழங்கியது. அத்துடன் துறைமுக நகரத்திட்டமும் எதிர்பார்த்த வெற்றியை வரையறுத்த காலத்திற்குள் அளித்திருக்கவில்லை.

இவையெல்லாம், ஆட்சி மாறிய பின்னரும் நீடித்தமையானது, சீனாவுக்கு நிச்சயமாக குடைச்சலைக் கொடுத்திருக்கும். தன்னுடைய ஆட்கள் (ராஜபக்ஷக்கள்) ஆட்சியில் இருக்கின்றார்கள் என கருதிய சீனாவுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமையானது நிச்சயமாக திண்டாட்டத்தினை ஏற்படுத்தியிருக்கும்.

இதனால், தான் மஹிந்த பதவியில் இருந்து இறங்கும் நிலை ஏற்படும் வரையில் சீனா அமைதியாக இருந்துவிட்டது. அதன் பின்னரும் அமைதியாகவே இருக்கின்றது.

இதனைவிட, பிறிதொரு காரணமும் உள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமையை எடுத்துக்கொண்டால் தற்போது பணவீக்கம் 40 சதவீதத்தினை தொட்டு விட்டது. அத்துடன் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த முடியாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்து விட்டது.

இந்நிலையில் ஏற்கனவே இலங்கையின் மொத்தக் கடனில் காணப்படும் 47 சதவீத வெளிநாட்டுக்கடனில் 10 சதவீதத்தினைக் கொண்டிருக்கும் சீனாவுக்கு மீண்டும் இலங்கைக்கு கடன்களை வழங்குவதில் அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வழங்கிய கடன்களை மீளப் பெற முடியாது விழி பிதுங்கி நிற்கும் சீனா மேலதிகமாக கடன்களை வழங்குவதற்கு முன்வராது.

ஏனென்றால், அந்த நாட்டைப் பொறுத்தவரையில், தனது பொருளாதார நலன்களுக்கே பிரதான இடத்தினை வழங்குகின்றது. அதுமட்டுமன்றி புதிதாக கடன்களை வழங்குவதாக இருந்தலும் அந்நாடு பிறிதொரு நிபந்தனையையும் கொண்டிருக்கின்றது.

அதாவது, ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மீளச் செலுத்தும் தொகையை தனது நாட்டு வங்கியூடாக புதிய வட்டி வீதத்தில் வழங்கி விட்டு அக்கடன்கள் அடைக்கப்பட்டவுடன் மீண்டும் இலங்கையின் அத்தியதாசியமான தேவைகளுக்கு தேவையான கடன்களையும் புதிய வட்டி வீதத்தில் வரையறுக்கப்பட்ட காலத்தினுள் வழங்க முடியும் என்பதில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

சீனாவின் இந்த இறுக்கமான நிலைப்பாடு பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கையை ஒட்டுமொத்தமாக கடனால் மூழ்கடிக்கச் செய்யும் இலக்கை கொண்டதாக பார்க்க வேண்டியுள்ளது.

இதனால், தான் அண்மைய நாட்களில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் சீனா மதில் மேல் பூனையாக இருந்து வருகின்றது. ஆனால் மறுபக்கத்தில் பிறிதொரு நகர்வினையும் முன்னெடுத்துள்ளது.

ஆட்சியாளர்களுடன் குறிப்பிட்ட இடைவெளிகளைப் பேணிக் கொண்டிருக்கும் சீனா நேரடியாக மக்களை நோக்கி நகர்ந்துள்ளது. மக்களுடன் மக்கள்’ இராஜதந்திர மூலோபாயத்தினை கையிலெடுத்துள்ளது.

அதனாலேயே அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீனத்தூதுவர் பல தரப்பட்ட சந்திப்புக்களையும் செய்ததோடு, உலர் உணவுப்பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை நேரடியாகவே வழங்கியிருக்கின்றார்.

அதேபோன்று, தென்னிலங்கையிலும், ராஜபக்ஷக்களின் முகாமிலிருந்து வெளியேவந்துள்ள விமல்வீரவன்ச, உதயகம்மன்பில உள்ளிட்டவர்கள் ஊடாக உதவிப்பொருட்களை சிங்கள மக்களை சென்றடையச் செய்துள்ளது சீனா.

இந்தச் செயற்பாடானது, ஆட்சியாளர்களை புறமொதுக்கி மக்களை தமது கைக்குள் போட்டுக்கொள்ளும் வகையில் முன்னெடுக்கப்படும் நகர்வாகும். இது இலங்கையின் இறைமையைக் கூட கேள்விக்கு உட்படுத்தும் நிலைமையை ஏற்படுத்தலாம். ஆபத்துக்களை உணரவேண்டியது ஆட்சியாளர்கள் மட்டுமல்ல மக்களும் தான்.

Related

Tags: ஆட்சியாளர்இலங்கைசீனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்காவில் மீண்டுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவம்: நான்கு பேர் உயிரிழப்பு!

Next Post

அரசியல் – பொருளாதார நிலைமையை தீர்க்க இளம் தொழில் நிபுணர்களிடமிருந்து முன்மொழிவு!

Related Posts

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
இலங்கை

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-13
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!
இலங்கை

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

2025-12-13
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!
இலங்கை

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-13
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பகிரவேண்டாம் !
இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பகிரவேண்டாம் !

2025-12-13
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!
இலங்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முற்பணம் கொடுப்பனவு!

2025-12-13
முல்லைத்தீவு மாவட்டதினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை !
இலங்கை

முல்லைத்தீவு மாவட்டதினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை !

2025-12-13
Next Post
அரசியல் – பொருளாதார நிலைமையை தீர்க்க இளம் தொழில் நிபுணர்களிடமிருந்து முன்மொழிவு!

அரசியல் - பொருளாதார நிலைமையை தீர்க்க இளம் தொழில் நிபுணர்களிடமிருந்து முன்மொழிவு!

அமைச்சுப் பதவிக்காக பிரதமரின் வாசஸ்த்தலம் முன்பாக பாய்போட்டு படுத்திருக்கும்  எம்.பிக்கள்!

அமைச்சுப் பதவிக்காக பிரதமரின் வாசஸ்த்தலம் முன்பாக பாய்போட்டு படுத்திருக்கும் எம்.பிக்கள்!

ஒரே நாடு ஒரே சட்டம் – ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ஒரே நாடு ஒரே சட்டம் - ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

0
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

0
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

0
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-13
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

2025-12-13
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-13
சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

2025-12-13
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

ஒன்டாரியோவில் 15 வயதுடைய நபரை கொலை செய்த குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

2025-12-13

Recent News

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-13
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

2025-12-13
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-13
சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

2025-12-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.