அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், சீன பிரதமர் வாங் யியை சந்தித்து, தாய்வான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்குமாறு வலியுறுத்தினார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்திருந்த நிலையில், தாய்வான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என பிளிங்கன் வலியுறுத்தினார்.
இரு தலைவர்களும் திறந்த தொடர்புகளை பேணுவது மற்றும் அமெரிக்க-பி.ஆர்.சி. உறவை பொறுப்புடன் நிர்வகிப்பது குறித்து விவாதித்துள்ளனர்.
உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு அமெரிக்காவின் கண்டனத்தை தெரிவித்த பிளிங்கன் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான மொஸ்கோவின் படையெடுப்பிற்கு பி.ஆர்.சி. ஆதரவை வழங்கினால் ஏற்படும் தாக்கங்களை கோடிட்டுக் காட்டினார்.
எமது நலன்கள் குறுக்கிடும் பி.ஆர்.சி.உடன் ஒத்துழைக்க அமெரிக்கா தயராகவே உள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார் என பிளிங்கின் தொடர்பாளர், நெட் பிரைஸ் குறிப்பிட்டார்.
முன்னதாக, சீனா-தாய்வான் உறவுகள் குறித்து அமெரிக்கா பலமுறை குரல் எழுப்பியது.
அத்துடன், சீன படையெடுப்பிலிருந்து தாய்வானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.
சீனப் படையெடுப்பு ஏற்பட்டால் தாய்வானைப் பாதுகாப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பைடன், ‘உண்மையில் முன்னோடியில்லாத தாக்குதல் நடந்தால்’ அமெரிக்கா தாய்வானைப் பாதுகாக்கும் என்று கூறியுள்ளார்.