யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) வல்லை பகுதியில் வாகனம் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் நெல்லியடி திருமகள் சோதி வீதியைச் சேர்ந்த பூ. கவிதாசன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞனை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.