இலங்கையின் இவ்வாண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இதனையடுத்து எல்.பி.எல் அணிகளின் உரிமையாளர்கள், தமது அணிகளுக்கான வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஏலம் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் 140 பேர் உட்பட 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் இவ் ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் இவ் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கையெழுத்திட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 வயதான ரெய்னாவின் அடிப்படை விலை 50,000 அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.