வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது.
இன்று (11) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்தனர். இந்த மாம்பழ திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். இதன்போது முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
@athavannews


















