கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் விதித்த வரிகளுக்குப் பதிலடியாக, பல்வேறு அமெரிக்கப் பொருட்கள் மீது 50% வரையிலான வரி விதிப்பை (Counter-tariffs) கனடா அறிவித்துள்ளது.
கனடா அதிகாரிகளால் நேற்று அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, எஃகு (Steel), தளபாடங்கள் (Furniture), புதிய சூரை மீன் (Fresh Tuna) மற்றும் பருத்தி ஆடைகள் உள்ளிட்ட சுமார் 28 பில்லியன் கனடிய டொலர் மதிப்புடைய அமெரிக்கப் பொருட்களைப் பாதிக்கும்.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரிகளுக்கு இணையான தொகையைக் இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வரி விதிப்புகள் வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
கடந்த வார இறுதியில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, கனடிய பொருட்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் 50% வரிகளை விதித்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, “கனடிய தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கவும், அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் விகிதாசார ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் பதிலடி கொடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கனடாவின் நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் சாம்பேன் (François-Philippe Champagne) தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் இந்த வரி விதிப்புகளால் பாதிக்கப்படும் கனடிய நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், வேலை இழப்புகளைத் தடுத்து நிறுவனங்களை நஷ்டமின்றி நடத்தவும் 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான மேலதிக உதவித் திட்டத்தையும் கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.














