ஜனவரி முதல் வாரத்தில் பிரிஸ்பேன் சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் டென்னிஸ் தொடரில் ஒரு வருடத்திற்கு பின்னர் பங்கேற்பதாக ரஃபேல் நடால் அறிவித்துள்ளார்.
22 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்ற ரபேல் நடால், 2023 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிற்கு பின்னர் இடுப்பு வலி காரணமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் அடுத்த மாதம் அவுஸ்ரேலியாவில் நடைபெறும் தொடரில் மீண்டும் தான் விளையாட போவதாக ரஃபேல் நடால் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
போட்டியிலிருந்து ஒரு வருடம் விலகியிருந்த தனக்கு தற்போது சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என 37 வயதான ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.