கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று (15) காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் இயந்திரம் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், பிரதான மார்க்கம் மற்றும் கரையோரப் மார்க்கமூடான ரயில் சேவைகளை இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், பாதிக்கப்பட்ட ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வரவும் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.