தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நெல்லை மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன் நாளை மறுநாள் பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற விழாவில் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மார்க்கெட் உள்ளிட்ட கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ முதலமைச்சரின் வருகையையொட்டி நெல்லை மாவட்ட பொலிஸார் சார்பில் வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு சம்மந்தமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக முதலமைச்சரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெல்லையில் இன்று காலை 6 மணியில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து நெல்லை பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.