”இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள், வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்துள்ள USAID , மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கடந்த ஆண்டுகளில் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை பணமாகவும் மானியங்களாகும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மனிதாபிமான உதவி என்ற போர்வையில் மற்ற நாடுகளில் பிரச்சினைகளையும் உறுதியற்ற தன்மையையும் உருவாக்க ருளுயுஐனு இன் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
USAID தங்கள் மானியங்கள் மற்றும் உதவி நிதிகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது பற்றிய தெளிவான பதிவு எதுவும் இல்லை எனவும் ருளுயுஐனு இன் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம், அந்த சலுகைகளைப் பெற்ற அரசு சாரா நிறுவனங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். அத்தோடு, அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான விதிமுறைகள் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே வெளிப்படைத்தன்மையைப் பேண இந்த விதிமுறைகளைக் கொண்டுவருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.