கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சந்தையில் காய்கறிகளின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விலை ரூ.1200 -1,400 ஆகவும், ஒரு கிலோ கறி மிளகாயின் விலை ரூ.1000 ஆகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மிளகாய் விலை அதிகரிப்பால், மிளகாய் விற்பனையும் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.