இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (11) மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 232,000 ரூபாவாக உள்ளது.
22 கரட் தங்கம் ஒரு பவுணானது 214,00 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 230,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 212,750 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2,882.26 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.