16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாத்தளை, கந்தேநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி டிசம்பர் 6 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை காணவில்லை என அவரது பாட்டி அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன சிறுமி சுமார் 05 அடி உயரம் மற்றும் நீண்ட முடி மற்றும் மெல்லிய உடல் அமைப்பை கொண்டவர்.
காணாமல் போன சிறுமியின் பெயர் லமங்கெதர தருஷி சம்பிகா என்பதாகும்.
அவர் இலக்கம் 85, கந்தேநுவர, அல்வத்தை என்ற முகவரியில் வசிப்பவர்.
காணாமல் போன சிறுமி பற்றி மேலும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்கள் மூலமாக தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கந்தேநுவர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி :- 071 – 8592943
கந்தேநுவர பொலிஸ் நிலையம் :- 066-3060954