கேகாலை, அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொக்க பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றைய தினம்(23) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் கல்பொக்க பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ள நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து வீட்டை சோதனையிட்ட போது, சடலத்தை கண்டுள்ளனர்.
இதை அடுத்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சடலமானது கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக அரநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை; மேற்கொண்டு வருகின்றனர்.