பிரான்சின் மார்சேய் நகரத்தில் உள்ள ரஸ்ய துணை தூதரகத்தின் மீது இனந்தெரியாதவர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது துணைதூதரக கட்டிடத்தின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் மூன்றாவது பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை எனவும் ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தாக்குதலை அடுத்து அந்த பகுதியை சுற்றிவளைத்து போக்குவரத்தை தடைசெய்துள்ள பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது பயங்கரவாத தாக்குதல் போல தோன்றுவதாக தெரிவித்துள்ள ரஸ்யா முழுமையான விசாரணையை நடத்த கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.