பத்தேகம, எத்கந்துர பகுதியில் நேற்றிரவு (27) இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மோதலின் போது சகோதரர்கள் கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 33 மற்றும் 36 வயதுடைய பத்தேகம, எத்கந்துர, மத்தேவில பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் காலி மற்றும் எல்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.