பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் சிறை அதிகாரி ஒருவர் மீது காலி தலங்கஹ பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.