காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மோட்டார் சைக்கிள்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரியான சிறிதத் தம்மிக்க இன்று மாலை துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அக்மீமன, தலகஹபிட்டியவில் உள்ள அவரது வீட்டில், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் இந்த படுகொலை நடத்தப்பட்ட நிலையில் துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரி சிறிதத் தம்மிக்கவின் அக்மீமன, தலகஹபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டில், இன்று மாலை 4:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், (பிஸ்டல்) வகையைச் சேர்ந்த துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்து காணப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.