இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 18 ஆவது சீசனுக்கு முன்னதாக அக்சர் படேல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்சர் படேல் 2019 ஆம் ஆண்டு முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
மேலும், கடந்த நவம்பரில் நடந்த மெகா ஏலத்தில் 16.50 கோடி இந்திய ரூபாவுக்கு அணியில் தக்கவைக்கப்பட்டார்.
டெல்லியை தளமாகக் கொண்ட அணியுடன் ஆறு சீசன்களில், 31 வயதான இவர் 82 போட்டிகளில் விளையாடியுள்ளார், 967 ஓட்டங்களை எடுத்துள்ளார் மற்றும் 7.09 என்ற எகானமியில் 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக, அக்சர் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்,
மேலும், 1653 ஓட்டங்களை எடுத்துள்ளதுடன், 123 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதில் 2016 ஆம் ஆண்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்காக 5 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது ஒரு அற்புதமான ஹாட்ரிக் அடங்கும்.
அக்சரின் ஐ.பி.எல். தலைமை அனுபவம் குறைவாக இருந்தாலும், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் குஜராத்தை வழிநடத்தினார் மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் டி:20 போட்டிகளில் துணைத் தலைவராக பணியாற்றினார்.
அனைத்து அணிகளுக்குமான தலைவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2025 ஐ.பி.எல். போட்டிகளானது எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.