கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இரு மீனவர்கள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்கள் காணாமல்போயுள்ளனர்
குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன் கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள பிரதானிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்
மேலும் மீனவர்கள் தொடர்பில் தேடுதல் உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதுடன் இதற்கமைய தேடுதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.