நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொருதொட்ட பகுதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (20) பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.