இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழு இலங்கைக்கு புறப்படவுள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தினத்தந்தி செய்தியின்படி,
ராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழு, இன்று (25) திருச்சியிலிருந்து கொழும்பு நோக்கி பிற்பகல் 2 மணிக்கு விமானத்தில் ஏற திட்டமிடப்பட்டுள்ளது.
மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஆய்வு செய்யவும், இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரவும் இந்தக் குழு திட்டமிட்டது.
திட்டமிட்டக் கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் ஏப்ரல் 1 ஆம் திகதி தமிழகம் திரும்ப உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.